பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
இன்று (நவ.,18) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாராவின் வாழ்க்கை பற்றிய ஆவணப்படம் வெளியாகியுள்ளது. 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற அந்த ஆவணப்படத்தில் நயன்தாராவின் வாழ்க்கை, அவர் சந்தித்த கஷ்டங்கள், சினிமா வாழ்க்கை, காதல், திருமணம் என அனைத்தும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் தனது முந்தைய காதல் பற்றி நயன்தாரா பேசியதாவது: எனது முதல் ரிலேஷன்ஷிப்பை எடுத்துக்கொண்டால், முழுக்க முழுக்க நம்பிக்கை அடிப்படையில் இருந்தது. நம்பிக்கை மட்டும்தான் இருவருக்குமிடையே நல்ல ரிலேஷன்ஷிப்பை வைத்திருக்கும். காதலை தாண்டியும் நம்பிக்கை இருக்க வேண்டும். நம் காதலரும் நம்மை முழுமையாக காதலிக்கிறார் என்பதை நம்ப வேண்டும். 100 சதவீதம் நாமும் காதலிக்க வேண்டும். நான் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறேன்.
என்னுடைய முந்தைய ரிலேஷன்ஷிப் பற்றி இதுவரை நான் எங்குமே பேசியதில்லை. ஆனால், எல்லோரும் நிறைய விஷயங்களை அவர்களே நினைத்துக்கொள்கிறார்கள். எந்தக் கதையை நம்ப வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டுமே அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், அந்தக் கதைகள் எல்லாம் மோசம். என்னுடைய மனதை காயப்படுத்திய விஷயம் என்னவென்றால், என்னைப்பற்றிய கதையை என்ன, ஏது என்றுகூட விசாரிக்காமல் அவர்களாகவே ஒன்றை நினைத்துக்கொண்டதுதான்.
இன்றுவரை எனது ரிலேஷன்ஷிப்பில் சம்பந்தப்பட்ட ஆண்களை ஒருத்தர்கூட கேள்வி கேட்கவில்லை. சம்பந்தப்பட்ட ஆண்களிடம் சென்று, 'நீங்கள் ஏன் இதை செய்தீர்கள், உண்மையில் என்ன நடந்தது?' என்று கேட்டதே இல்லை. எப்போதும் ஒரு பெண்ணை மட்டும்தான் கேள்வி கேட்கிறார்கள். இது நியாயமே இல்லை. என்னைக் கேள்வி கேட்டால் சம்பந்தப்பட்ட மற்றொரு நபரையும் கேள்வி கேட்க வேண்டும்தானே? நான் ஒருத்தி மட்டும் தான் இங்கே ரிலேஷன்ஷிப்பில் இருந்துருக்கிறேனா அல்லது நான் ஒருத்தி மட்டும் காதல் செய்துள்ளேனா. இது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை. இவ்வாறு நயன்தாரா ஆதங்கமாக பேசியுள்ளார்.